14 வயதுச் சிறுமியை தவறான முறையில் அணுகிய சமுர்த்தி உத்தியோகத்தர்!

241 0

மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் 14 வயதுச் சிறுமியை தவறான முறையில் அணுகியதோடு தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்ததனை அவதானித்த சிலர் தொலைபேசியை பறித்ததும் சமுர்த்தி உத்தியோகத்தர் தப்பியோடிய நிலையில் ஊர்காவற்றுறைப் பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.

மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்  ஒருவர் நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த  14 வயதுச் சிறுமியை தனது அலுவலகத்திற்குள் அழைத்து  தவறான முறையில் அனுகியதோடு அவற்றினை தனது  தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இவற்றினை  அவதானித்த சிலர் சமுர்த்தி உத்தியோகத்தரின் தொலைபேசியை பறித்ததும் சமுர்த்தி உத்தியோகத்தர் அங்கிருந்து  தப்பியோடியுள்ளார்.

இவ்வாறு இழைக்கப்பட்ட சிறுவர் பாலியல் உரிமை மீறல்கள் மற்றும்  சிறுமி சகிதம் வேலணை துறையூரில் வசிக்கும் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தருக்கு எதிராக பெற்றோர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment