மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டம்!

239 0

நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு இடமளியேன் என கோரி வட்டகொடை மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தின் எம்.ஜி.பந்தல பண்டார மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரதத்துடன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

தனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு தாம் அனுமதிகளை பெற்றிருந்த வேளையில் அதனை அரச சொத்தாக அபகரிக்க திட்டம் தீட்டுகின்றார்கள். இந்த மரங்களை வளர்த்ததால் அதனை வெட்டும் தருவாயில் எனது குடும்பத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

இதற்கென 2016.10.18ம் திகதி அரசாங்க செயலக பிரிவில் அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. இவ் அனுமதியை பெறுவதற்காக பன்னிரென்டாயிரம் தொடக்கம் பதினைந்தாயிரம் ரூபா வரையிலான தொகையும் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

இருந்தும் எனக்கு சொந்தமான மரங்களை என்னால் வெட்ட முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளேன். ஆகையால் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றேன். நான் வளர்த்த மரங்கள் உபயோகத்திற்காக வெட்டும் தருவாயில் உள்ளது.

இதன்மூலம் எனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும் என கோரி இன்று மர கூடாரம் கட்டி உண்ணாவிரதத்துடன் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

Leave a comment