லலித் வீர­துங்க, அனுஷ பெல்­பிட்­டவை விடு­விக்க தேரர்கள் நிதி சேக­ரிக்க திட்டம்

207 0

லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோருக்கு நீதி­மன்­றினால் விதிக்­க­ப்பட்­டுள்ள நஷ்­ட­ஈடு மற்றும் தண்­டப்­பணம் என்­ப­வற்றைச் செலுத்­து­வ­தற்குத் தேவை­யான நிதியைத் திரட்­டு­வ­தற்கு நாளை மறுதினம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வேலைத்­திட்டம் ஒன்றை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக பேரா­சி­ரியர் மெத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் தெரி­வித்தார்.

“சில்­துணி சிறைக் கைதி­களைப் பாது­காக்கும் நிதியம்” என்னும் அமைப்­பினர் நேற்று கொழும்­பி­லுள்ள சம்­புத்­தத்வ ஜயந்­தியில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­மைக்­காக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் தண்­டிக்­கப்­ப­டு­கிறார் என்றால் அது மிகவும் வருத்­தத்­திற்­கு­ரிய விட­ய­மாகும். எனவே நாடு என்ற ரீதியில் அவர்­களை குறித்த நெருக்­க­டி­யி­லி­ருந்து பாது­காக்க வேண்­டிய கடப்­பாடு எமக்­குள்­ளது.

என­வேதான் “சில்­துணி சிறைக் கைதி­களைப் பாது­காக்கும் நிதி­யத்தை” ஆரம்­பித்து அதன்மூலம் நிதி திரட்டி அவர்­களைப் பாது­காப்­ப­தற்கு நாம் முன்­வந்­துள்ளோம். ஆகவே நாளை மறுதினம் 15 ஆம் திகதி காலை எட்டு மணிக்கு புறக்­கோட்­டை­யி­லுள்ள சம்­புத்­தா­லோக விகா­ரையில் நிதி திரட்டும் வேலைத்­திட்­டத்தை ஆரம்­பிக்­க­வுள்ளோம். ஆரம்ப நிகழ்வில் நாடு தழு­விய ரீதி­யி­லுள்ள சகல தேரர்­க­ளையும் கலந்­து­கொள்­ளு­மாறு அழைப்பு விடுக்­கிறோம்.

மேலும் 16 மற்றும் 17 ஆம் திக­தி­களில் நாடு தழு­விய ரீதியில் நிதி சேக­ரிப்­ப­தற்கும் ஏற்­பா­டு­செய்­துள்ளோம். அவ் ­வாறு சேக­ரிக்­கப்­படும் நிதி­யினை எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பிலுள்ள சம்புத்தத்வ ஜயந்திக்கு கொண்டு வந்து சம்பந் தப்பட்டவர்களிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment