முடியுமானால் அவரவர் சின்னத்தில் போட்டியிடுங்கள் – ஆறுமுகன் தொண்டமான் சவால்

233 0

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் மலையக கட்சிகள் அவரவர் சின்னத்தில் போட்டியிட்டால் மலையகத்து மக்களின் ஆதரவு யார் பக்கம் என்பது தெரியவரும். அப்போது சில நபர்கள் சொல்லும் மலையகம் எங்கள் பக்கம் என்பதின் முகத்திரை கிழிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

மஸ்கெலியா பெயார்லோன் தோட்டத்தில் சுமார் 30 லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட சனசமூக நிலையம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;
அவரவர் தனது கட்சியில் போட்டியிடுவார்களேயனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் போட்டியிடும். தைரியம் இருந்தால் சவாலானவர்கள் அவரவர் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு பார்க்கவும். இந்த சவாலுக்கு நான் தயார்.

யானை மேல் ஏறி மேலே பார்த்தால் யானை தும்பிக்கையை இரண்டு நிமிடம் உயர்த்தினால் கிழே விழுந்தவுடன் யானை நம்மை மிதித்து விடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் அதன் சின்னத்தில் போட்டியிடும். மலையக மக்கள் யார் பக்கம் என்பதை எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் உணர்த்தும். மலையக மக்களுடைய அன்பும், பாசமும் இ.தொ.காவுக்கு நிறைந்துள்ளது. அப்போது மலையக மக்கள் எம்முடன் நின்று சொல்லுபவர்களின் முகத்திரை கிழித்தெறியப்படும்.

இவரும் யானை சின்னத்தில் போட்டியிட்டவர் என்று பலராலும் சொல்லப்படலாம். ஆனால் சேவல் சின்னம் யானையிலும், நாட்காளியிலும் போட்டியிட்டுள்ளது. இன்று பலப்பரீட்சை வந்ததால் தனியாக நின்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் செல்வாக்கை காட்டும்.

மலையக மக்களை பாதுகாப்பது ஐயாவின் கனவாகும். அந்தவகையில் இ.தொ.கா என்ற ஸ்தாபனம் இந்திய வம்சாவளி மக்களை இதுவரை பாதுகாத்தது போல் தொடர்ந்தும் பாதுகாப்பதை கடமையாக கொண்டுள்ளது.

கடந்த பொது தேர்தல் காலத்தில் அலை ஒன்று அடித்தது. அது சுனாமியாக மாறி அவ்வாறாகவே சென்றுவிட்டது. எதிர்வரும் தேர்தலில் தனித்து நின்று போட்டியிடும் சவாலை கட்சிகளுக்கு விடுக்கின்றேன். நானும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு போட்டியிட தயாராகவுள்ளேன் என்றார்.

Leave a comment