ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை நடவடிக்கை

8307 0

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரை ரோந்து கப்பலில் வந்த சிறிலங்கா கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வார்கள். சிறிலங்கா கடற்படையினரின் தொல்லைகளால் நேற்று சுமார் 300 விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, சிறிலங்கா கடற்படையினர் ரோந்து கப்பல்களில் அங்கு வந்தனர். அவர்கள் மீனவர்களை பார்த்ததும் அங்கிருந்து செல்லுமாறு கூறினர். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய அவர்கள், ராமேசுவரம் மல்லிகைநகர் துரை என்பவருக்கு சொந்தமான படகு உள்ளிட்ட 2 படகுகளையும், அதில் இருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்து கொண்டு சென்றனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சிறிலங்கா காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றனர். சிறிலங்கா கடற்படையினர் தொடர் அட்டூழியத்தால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment