கிளிநொச்சியில் விபத்து – பெண் பலி

225 0
கிளிநொச்சி பூநகரிப்;பகுதியில் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்;குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணெருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த ஏனையோர் சிறுகாயங்;குள்ளானதாக தெரிவிக்;கப்படுகின்றது.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பரந்தன் பூநகரி வீதியூடாகப் பயணித்துக்கொண்டிருந்த வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டது.
இதன்போது துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணெருவர் சம்பவத்தில் படுகாயடைந்தார்.
சம்பவத்தில் 40 வயதுடைய பெண் தலையில் அடிப்பட்டு படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமானதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment