ஆணைக்குழுவில் இருந்து வெளியேற அர்ஜூன் அலோசியஸூக்கு தடை 

208 0
மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் இருந்து வெளியேற அர்ஜூன் அலோசியஸூக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் 5வது நாளாகவும் இன்று மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
அவரிடம் ஆணைக்குழுவில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், விசாரணை நிறைவின் பின்னர் அவருக்கு ஆணைக்குழுவில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அர்ஜூன் அலோசியஸ் இன்று தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment