கொள்ளைச் சம்பவங்கள் – ஆறுபேர் கைது

246 0
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தெகடன பிரதேசத்தில் வைத்து நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குத்தகைக்கு பெறப்பட்ட வாகனங்களில் வீடுகளுக்கு சென்று ஆயுதங்களை காண்பித்து அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளைக்காக அவர்கள் பயன்படுத்திய வாகனம் மற்றும் தொலைபேசி உட்பட்ட பல பொருட்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

Leave a comment