வட கொரியாவின் ஏவுகணை திட்டங்கள் உலகத்தை அச்சுறுத்தும் மோசமான விடயம் – ஐக்கிய நாடுகளின் செயலாளர்

453 0

வட கொரியாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அணு மற்றும் ஏவுகணை திட்டங்கள் உலகத்தை அச்சுறுத்தும் மோசமான விடயம் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ கட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் செய்தித்தாள் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இப்படியான அபாயகரமான தன்மையினை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

காலம் கடப்பதற்கு முன்னர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வல்லரசு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

அதேவேளை, இன்று நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அமர்வின் போது வடகொரியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடையினை, மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது.

வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார தடை விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற கொள்கையினை சீனாவும் ரஷ்யாவும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment