சுகாதாரம் தொடர்பான தெற்காசிய குழு கூட்டம் நாளை கொழும்பில்

3086 0

சுகாதாரம் தொடர்பான 10வது தெற்காசிய குழு கூட்டம் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு, தெற்காசிய சுகாதார அமைப்புடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக சாக் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர்.

சுகாதார பாதுகாப்பு தொடர்பில் சர்வதேச ரீதியாக உதவிகளை வழங்கும் யுனிசெப் அமைப்பு மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment