இலங்கையுடனான உறவினை தொடர்ந்தும் பேண இந்தியா ஆவல் – நரேந்திர மோடி

2190 0

இலங்கையுடனான உறவினை தொடர்ந்தும் பேண இந்தியா ஆவலுடன் உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ராஜதந்திர இரு தரப்பு உறவினை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தியா அதிகம் கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிவிவகாரத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, இந்திய பிரதமரை புது டெல்ஹியில் சந்தித்து உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பல விடயங்கள் குறித்து இந்திய பிரதமருடன் விரிவாக உரையாடியுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் திலக் மாரப்பன தமது ருவிட்டரின் பதிவு செய்துள்ளார்.

கடந்த மே மாதம் பதவியில் இருந்த வெளிவிவகார அமைச்சர் சர்வதேச பௌர்ணமி தினம் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை இந்தியாவுடன் மேற்கொண்டதாக பிரதமரின் காரியாலயம் விடுத்துள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment