மைத்திரியின் சகோதரருக்கு விளக்கமறியல்!

250 0

பொலன்னறுவவில்  விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இரண்டு பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவ- ஹிங்குராகொட வீதியில் எதுமல்பிட்டிய என்ற இடத்தில் நேற்று பிற்பகல் 1.10 மணியளவில், லால் சிறிசேன ஓட்டிச் சென்ற லான்ட் குரூசர் வாகனம், உந்துருளி ஒன்றை மோதித் தள்ளியது. இந்த விபத்தில் உந்துருளியில் பயணம் செய்த சகோதரர்களான இருவர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்ப இடத்தைவிட்டுத் தப்பியோடிய லால் சிறிசேன சில மணிநேரம் கழித்து காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து, அவரை பொலன்னறுவ பதில் நீதிவான் முன் நிறுத்தியபோது, அவரை செப்ரெம்பர் 11ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

Leave a comment