வீட்டினுள் விழுந்த கற்பாறை: 30 பேர் இடம்பெயர்வு

238 0

மஸ்கெலியா – பிரவுண்லோ தோட்டம் பகுதியில் வீடொன்றின் மீது, நேற்று இரவு 09.00 மணியளவில், கற்பாறை ஒன்று சரிந்து விழுந்துள்ளது. 

இதன்போது, வீட்டினுள் இரு ஆண்கள், இரு பெண்கள். ஐந்து சிறுவர்கள் இருந்துள்ளனர்.

எனினும், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அப் பகுதியில் இருந்த 30 பேர் தற்போது பிரவுண்லோ தோட்ட கலாச்சார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசத்தில் தொடர்ந்து நிலவிரும் சீரற்ற காலநிலை காரணமாக, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியை சீராக்கும் பணியை தோட்ட நிர்வாகமும், மவுஸாகலை இராணுவத்தினரும், மஸ்கெலியா பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களை விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Leave a comment