இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் 

220 0

வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இன்று இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்

வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை அவரின் இந்திய விஜயம் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை, அவர்,இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் அமைச்சர் திலக் மாரப்பன, 10 ஆம் திகதி கொழும்பு திரும்புவார் என்றும் வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment