அர்ஜூன் அலோசியஸ் சத்திய கடதாசியுடன் ஆணைக்குழுவில் முன்னிலையாக உத்தரவு 

218 0

பேர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் எதிர்வரும் திங்கட்கிழமை, சத்திய கடதாசியுடன் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என பிணை முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று உத்தரவிட்டுள்ளது.

அர்ஜூன் அலோசியஸ் இன்று இரண்டாது தினமாக வாக்குமூலம் வழங்கும் பொருட்டு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

அவர் விசேட உடல் சோதனைகளின் பின்னரே ஜனாதிபதி ஆணைக்குழுவினுள் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது அவருடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனும் வருகைத்தந்திருந்தார்.

இதனிடையே, நேற்று, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான, அர்ஜூன் அலோசியஸிடம் விசாரணை அதிகாரிகள் 10 மணி நேர விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment