அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! பணி நேரங்களில் மாற்றம்

232 0

காலை பொழுது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, அரச பணியாளர்களுக்கான நெகிழ்வான அலுவலக நேரங்களை பராமரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதிக அரச அலுவலங்கள் அமைந்துள்ள பத்தரமுல்லை பகுதியில் முதன் முதலில் அமுல்படுத்தப்படவுள்ள இத் திட்டத்தின் கீழ், காலை 7.30 மணி முதல் 9.15 வரை எந்த ஓர் நேரத்திலும் சேவைக்கு சமூகம் அளிக்க அரச பணியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, அவர்கள் சமூகமளித்த நேரத்தின் படி வேலைநேர அடிப்படையில் மாலை 3.15 முதல் 5.30 மணிக்கு இடையில் பணியை நிறைவு செய்து செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சகல பணியாளர்களும் காலை 9.15 முதல் மாலை 3.15 வரை கட்டாயமாக அலுவலகத்தில் இருக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சரின் செயலாளர் ஜே ஜே ரத்னசிறி  தெரிவித்துள்ளார்.

Leave a comment