இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவசி­ய­மாகும்

232 0

இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சியம் என்றும் மத்­தியில் பகி­ரப்­பட்ட   அதி­கா­ரத்தை மீளப்­பெ­றா­த­ வ­கையில் இரண்டாம் தர சபை­யாக மாகாண பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கிய செனட் சபை அமைக்­கப்­பட வேண்டும் எனவும் வலி­யு­றுத்தி அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு­விற்கு இடைக்­கால பின்­னி­ணைப்பு முன்­மொ­ழி­வினை

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு சமர்ப்­பித்­துள்­ளது.

அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன், வழி­ந­டத்தல் குழு உறுப்­பி­னரும் கூட்­ட­மைப்பின் பேச்­ச­ளா­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் கையொப்­ப­மிட்டு இந்த பின்­னி­ணைப்பு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து நேற்று நடை­பெற்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தில் எடுத்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் இந்த விடயம் குறித்து விளக்கம் அளித்­துள்ளார்.

கூட்­ட­மைப்பு சமர்ப்­பித்­துள்ள பின்­னி­ணைப்பு முன்­மொ­ழிவின் வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வு அவ­சி­ய­மாகும். மத்­தியில் பகி­ரப்­படும் அதி­காரம் மீளப்­பெ­றப்­ப­டா­த­வ­கையில் மாகாண பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கிய வகையில் இரண்டாம் தர சபை­யாக செனட் சபை அமைக்­கப்­ப­ட­வேண்டும். உச்­ச­நீ­தி­மன்­றத்தின் மீயுயர் தன்மை பாதிக்­கப்­ப­டா­த­வ­கையில் அர­சியல் அமைப்பு நீதி­மன்றம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். சமயம் சம்­பந்­த­மாக சமத்­து­வ­மான நிலைமை பேணப்­ப­ட­வேண்டும் என்றும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய விட­யங்­களை உள்­ள­டக்கி இடைக்­கால வரைபு உறுதி செய்­யப்­படும் பட்­சத்தில்       நியா­யத்­தன்மை பேணப்­பட்டால் அந்த வரைபை கூட்­ட­மைப்பு சாத­க­மாக பரி­சீ­லிக்கும் என்றும் இந்தப் பின்­னி­ணைப்பில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்த விடயம் குறித்து நேற்று முன்­தினம் நடை­பெற்ற அர­சி­யல்­யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுக்­கூட்­டத்தில் உறுப்­பி­னர்­க­ளுக்கும் விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. மீண்டும் வழிநடத்தல் குழுவானது எதிர்வரும் 20, 21, 22 ஆகிய தினங்களில் கூடவுள்ளது. 21 ஆம்திகதி அரசியல் யாப்புக்கான பின்னிணைப்புக்கள் தொடர்பில் ஆராயப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment