எதிர்வரும் ஆண்டுகள் இலங்கைக்கு திருப்பு முனை – ரணில்

338 0

dad1எதிர்வரும் ஆண்டுகள் இலங்கையின் பொருளாதாரத்திற்கான திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆண்டுகளாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், சென்ஜின் பிராந்திய கமியுனிச கட்சியின் செயலாளரையும், அங்குள்ள வர்த்தக பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இதன்போது இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மாற்றத்துக்கான நடவடிக்கைகளை நடப்பு அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் கொழும்பு நகரை ஆசியாவின் முதலீட்டு கேந்திர நிலையமாகவும், ஹம்பாந்தொட்டை நகரத்தை கைத்தொழில் பேட்டையாகவும் மாற்றி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.