சட்டவிரோத சிகரெட்களுடன் சீன பிரஜை கைது

276 0

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிகரெட்களுடன், கொள்ளுபிட்டிய பகுதியில் சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து நடத்திய சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து சுமார் 1200 சட்டவிரோத சிக்கரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட நபர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment