சீனா சென்றார் இந்திய பிரதமர்

224 0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் இடம்பெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றார்.
இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு ”பிரிக்ஸ்” எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இதற்கான மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
இதன்போது, உலகளாவிய பொருளாதார மேம்பாடு இந்த மாநாட்டில்
கலந்துறையாடப்படும்.
இதனிடையே தற்போதைய மாநாட்டில் இந்திய – சீனாவுக்கு இடையில் நிலவும் எல்லைப்பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படலாம் என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டு இந்தியாவின் கோவாவில் இடம்பெற்றது.

Leave a comment