இனப்படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

466 0

மியன்மாரில் இடம்பெற்று வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை கண்டித்தும், யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களினூடாக ஒன்றினைந்த இளைஞர் யுவதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ்ப்பாண பிரதான பேரூந்து நிலையத்தின் முன்பாக இடம்பெற்றது.

மியன்மாரில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வன்முறைகள் இடம்பெற்றுவருகின்றதுடன் கடந்த சில நாட்களாக அவை அதிகரித்துள்ளன.

அந்நாட்டு இராணுவத்தினராலும் தீவிர மதப் போக்குடையவர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகளை கண்டித்தே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

 

 

Leave a comment