இந்திய அரசாங்கத்தின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று யாழ்ப்பாணத்திலும் கோலாகலமாக நடைபெற்றது.
யாழ்.இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள யாழ்.இந்திய துணைத்தூதுவர் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இச் சுதந்திரதின நிகழ்வில் இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நேரத்தில் இந்திய சியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.
மேலும் இதன் போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.