நச்சு ஊசி இரகசியங்கள் கசிய தொடங்கி விட்டன -பிருத்துவிராச்

553 0

poison-vaccinsஇலங்கையில் 2009 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதி, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் சீன இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து அவர்களை எவ்வாறாகக் கையாள்வது என ஆலோசனை நடத்தினர். அதற்கு அவர்கள் சீனாவில் உள்ள நடைமுறையினை சிபார்சு செய்தது மட்டுமல்ல சீன இராணுவ மருத்துவ ஆய்வுப் பிரிவின் மெல்லக் கொல்லும் நச்சு ஊசிகளையம் நடமாடும் வாகனத்தில் ஊசிமூலம் மயக்கி உடல் அங்கங்களை எடுத்துவிட்டு ஊசி மூலம் கொல்லும் (Lethal Van)லெதல் வான்களையும் இலங்கைக்குக் கொடுத்து உதவியனர். இத்தகைய 5 வான்கள் சீனாவிலிருந்து கொழும்பு துறைமுகம் மூலம் வெலிக்கந்தைக்கு கொண்டுவரப்பட்டது.

வெலிகந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு கடுமையான சித்திரவதைகளும் விசாரணைகளும் இடம்பெற்றன. விசாரணை முடிவில் அவர்களை வேறுபிரித்து வெவ்வேறு இடங்களில் அடைத்து வைத்திருந்தனர்.

இயக்கத்தில் கடுமையாக வேலை செய்தவர்களை தனிமையான பகுதியில் அடைத்து வைத்திருந்தனர் அவர்களுடன் ஏனையவர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. உணவுக்கு வெளியே செல்லும்போது மட்டுமே அவர்களைக் காணலாம். அவர்கள் தடுத்துவைக்கப்பட்ட பகுதியில் இருந்து தினமும் 20 முதல் 30 பேர் வரையில் அங்கிருந்து கறுப்புநிற சீனத் தயாரிப்பு வானில் ஏற்றப்பட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு வெளியே கொண்டு செல்லப்பட்டவர்கள் மீளவே இல்லை. 2 மாதங்களாக இவ்வாறு நடைபெற்றது. பின் அப்பகுதியில் எவரும் எஞ்சியிருக்கவில்லை.
இத்தகைய கொல்லூசி மூலம் நச்சு ஊசிபோடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் உடனடியாக எரிக்கப்பட்டனர். இவ்வாறு 3800 விடுதலைப்புலிகள் தடயம் இல்லாது அழிக்கப்பட்டனர். இவ்வாறு தடுப்பில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு படிப்படியாக புற்றுநோய் வந்து இறக்கக் கூடியதாக சீன மருத்துவ ஆய்வு மையத் தயாரிப்பான போமலின் சேர்க்கப்பட்ட ஹெப்பரைற்றிஸ் பி (Hepatitis B Vaccine) அளிக்கப்பட்டது. 10000 இற்கும் மேற்பட்ட போராளிகளுக்கு இத்தகைய ஊசி போடப்பட்டது. இதனால் இப்போராளிகளுக்கு சாதாரண வாழ்வு பாதிக்கப்படும். குருதிச்சோகை, உடற்களைப்பு, நோய்த்தொற்று ஏற்பட்டு விரைவில் மரணம் ஏற்படும்.

தொடர்ச்சியாக தடுப்பில் இருந்த போராளிகளில் ஏற்படுகின்ற சடுதியான மரணங்கள் தமிழ்ச் சமூகத்தில் அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது.

ஆனால் சீன இராணுவ மருத்துவ ஆய்வுப் பிரிவு இவ் ஊசியின் தாக்கத்தினை நீண்ட காலத்திற்கு இலங்கை சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் கண்காணிக்கும் பொறிமுறையினை உருவாக்கியுள்ளது. இதற்காக வடக்கில் உள்ள சுகாதார திணைக்களித்தின் சுகாதார அதிகாரிகள், நிருவாக உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள் முதலானோருக்கு இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து ஆகியநாடுகளுக்கு சுற்றுலாவிற்கு அனுப்பி அன்று கருணா அம்மானை வீழ்த்தியது போல் விபசாரிகள் மூலம் அரச அதிகாரிகளைத் தங்கள் பிடிக்குள் வைத்துள்ளது.
இராணுவத் தளபதியும் ஆளுனருமான சந்திரசிறியின் மூலம் உருவாக்கப்பட்ட தொற்றாநோய்களின் தகவல் திரட்டு (Non Communicable Disease Programme) என்ற உபாயம் மூலம் இந்த நச்சு ஊசியின் பாதிப்பினை சீன இராணு புலானாய்வு மையம் அவதானித்து வருகிறது.
எனவே தற்போது சமூகத்திற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள நச்சு ஊசி விவகாரம் தொடர்பான தகவல்களை இலங்கை சுகாதார திணைக்களம் மூலம் திரட்டப்படும் பட்சத்தில் அவ்வூசியினை இராணுவ மருத்துவ ஆராய்ச்சிக்காகன சுலபமான தரவுகளாக மாற்றிவிடலாம். இலங்கையில் பாதுகாப்புத் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவும் சீனாவின் அனுசரணையில் அண்மையில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ ஆய்வு உலக சுகாதார நிறுவனம் மூலம் செய்யப்பட வேண்டும். 2009 இல் ஐ.நா செயலரும் அவரது ஆளணியும் சரணடைந்த பொதுமக்களையும் போராளிகளையம் பொறுப்பெடுக்காது இலங்கையசரசிடம் கையளித்தமை. ஐ.நா. வவுனியா முட்கம்பி தடுப்பு முகாம்களை தனது கட்டுப்பாட்டில் வைக்காது இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்க விட்டமை சிங்கள அரசின் தமிழின அழிப்பை இலகுபடுத்த உதவியது.
தமிழர்களுக்கு நீதி யென்பது திட்டமிட்டே மறுக்கப்பட்டு வருகிறது.