போட்டியில் வெற்றிக்கொள்ள முடியாவிட்டால் தான் அணியில் இருப்பதில் பயனில்லை என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
தன்னுடைய உடல் பிட்னஸ் நிலை குறித்து தனக்கும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் லசித் மாலிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இந்திய அணியுடனான நான்காவது போட்டியில் தோல்வியைத்
தழுவிய பின்னர் ஊடகங்களிடம் மாலிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சிம்பாப்வேவுடனான போட்டிகளில் தான் விளையாட முடியாமல் போனதற்கு தன்னுடைய உடல் நிலையே காரணம் என எண்ணுவதாகவும் மாலிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே இனிவரும் நாட்களில் தன்னுடைய உடல் நிலை தொடர்பில் அவதானம் செலுத்தி போட்டிகளில் சிறப்பாக விளையாட எதிர்பார்ப்பதாகவும் நேற்றைய போட்டியின் தற்காலிக தலைவர் – மாலிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கு மற்றுமொரு காரணம் அனுபவம் போதாமையே எனவும் மாலிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அணியினை விமர்சிக்காமல் இலங்கை அணியை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டுவருவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என்றும் மாலிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.