விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தான் அறியவில்லை – இராணுவத் தளபதி

1567 0

தனக்கு தெரிந்த வகையில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் பதவிக்காலம் இரண்டு வருடம் நிறைவடைந்துள்ளமையால் அவர் இலங்கைக்கு வருவது சாதாரண விடயம் என இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளில் தூதுவர்களாக பதவி வகிக்கும்  முன்னாள் இராணுவத் தளபதிகளும் தமது இரண்டு வருட சேவை நிறைவின் பின்னர் இலங்கைக்கு வருவது சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் தூதுவர்களாக பணிபுரியும் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு குறித்த நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தான் அறியவில்லை என்றும் இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேப்போல் பிரேசலில் தூதவராக பணியாற்றிய முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு புலிகள் அமைப்பினரால் பிரச்சினை இருப்பதாக தான் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment