உணவுப் பொதிகளின் விலை நாளை முதல் அதிகரிப்பு!

351 0

பொலித்தீன் பாவனை இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சோறு பார்சலின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நாளைய தினம் முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என, சங்கத்தின் தேசிய இணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

பொலித்தீன் உற்பத்தி மற்றும் பாவனை தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

பொலித்தீன் பை, உணவு பொதியிடலுக்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிஃபோம் உணவுப் பெட்டி என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

குறித்த தடையினை மீறி செயற்படுவோருக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை நீதிமன்றத்தால் வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்தத் தடைக்கு பொலித்தீன் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்கின்றனர்.

Leave a comment