சட்டவிரோதமாக மணல் ஏற்றிய ஒன்பது உழவுஇயந்திரங்களும் சாரதிகளும் பொலிசாரால் கைது

15899 0
நேற்று இரவு முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம்  இன்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில்  ஒன்பது உழவுஇயந்திரங்களும்  ஒன்பது சாரதிகளும்  பொலிசாரால்  கைது
குறித்த பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக பொலிசாரிற்கு  கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெளிகன்ன அவர்களின் ஆலோசனையின் கீழ் உப பொலிஸ்  பரிசோதகர் இந்து பிரதீபன் அவர்களின் விசேட குழுவினர் குறித்த பகுதியை முற்றுகை இட்டதில்  சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய ஒன்பது உழவுஇயந்திரங்களும் சாரதிகளும் ஊரித்த குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட  சாரதிகளும் உழவு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நாளை புதுக்குடியிருப்பு பொலிசாரால்  ஆயர்ப்படுத்தப்பட உள்ளனர்.