வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காகச் செல்­கின்­ற­வர்­களின் பாட­சாலைக் கல்­வி­யினைத் தொடரும் பிள்­ளை­க­ளுக்கு கூடு­த­லான சலு­கை

283 0

வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காகச் செல்­கின்­ற­வர்­களின் பாட­சாலைக் கல்­வி­யினைத் தொடரும் பிள்­ளை­க­ளுக்கு  கூடு­த­லான சலு­கை­களை எதிர்­கா­லத்தில் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை நல்­லாட்சி அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­ய­கமும் இணைந்து ஏற்­பாடு செய்த நட­மாடும் சேவை கடந்த திங்கட்கிழமை சம்­மாந்­துறை பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தேச செய­லாளர் எஸ்.எல். முகம்மட் ஹனீபா தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கை­யிலே – வறுமை கார­ண­மாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் பெண்­களே அதி­க­மாக வெளி­நா­டு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாகச் செல்­கின்­றார்கள். குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தில் மாத்­திரம் இவ்­வ­ருடம் 1400 பேர் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகத்தில் பதிவு செய்­துள்­ளனர். அதில் 900பேர் பெண்­க­ளாவர்.

கல்­மு­னையில் இயங்கி வந்த வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­யகத்தின்  காரி­யா­லயத்­தினை மீண்டும் திறக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்­பட அர­சியல் தலை­வர்கள் என்­னிடம் கேட்டுக்கொண்­டார்கள் அதனை திறப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­காக செல்­வோரில் பெருந்­தொ­கை­யானோர் வேலை­வாய்ப்புப் பணி­ய­கத்­தினால் பதிவு செய்­யாமல் செல்­கின்­றனர். இதனால் பாரிய அனு­கூ­லங்­களை வேலை­வாய்ப்பு பெற்றுச் செல்லும் மக்கள் இழந்து வரு­கின்­றனர்.

வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பிற்­காக பணி­யகத்தின் மூலம் பதிவு செல்­வோ­ருக்கு ஓய்­வூ­தி யம், புல­மைப்­ப­ரிசில் மற்றும் காப்­பு­றுதி போன்ற பல்­வேறு பாரிய நன்­மைகள் கிட்­டு­கின் ­றன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வேலைத்­திட்­டத்­திற்கு அமை­வாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­களில் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை நேரில் கண்­ட­றி­வ­தற்­காக வேண்­டியே விசேட நட­மாடும் சேவை நாடு­பூ­ரா­கவும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கிழக்கு மாகாண மக்கள் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­வ­தற்­காக விரைவில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யக­மொன்­றினை திறக்­க­வுள்ளோம்.

ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் அர­சாங்­கமும் இன­வாதம் இல்­லாமல் மக்­க­ளுக்கு சிறந்த சேவை­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்­துள்­ளது. அதற்கு அரச ஊழி­யர்­களின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­ன­தாகும்.

இந்­நி­கழ்வில் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ. அமீர், திணைக்களங்களின் தலைவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment