துஸ்பிரயோகிகளே அதிக குழப்பத்தில் – ரஞ்சன் ராமநாயக்க

227 0
நீதிமன்றங்கள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்தால், துஸ்பிரயோகிகளே அதிகம் குழப்பம் அடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
 இலங்கையின் நீதியரசர்களில் சிலர் கூட அதிக அளவில் துஸ்பிரயோகிகளாக வாழ்க்கை நடத்தியுள்ளனர்.
உண்மைகளைக் கூறுவதில் எந்த அச்சமும் இல்லை.
 தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து இந்த நீதிமன்றங்களே தம்மை விடுவிக்கும் என்று நம்பிக்கை தமக்கு இருக்கிறது என்று ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.

Leave a comment