பாட்சுவல்பாக் தமிழாலய மெய்வல்லுனர் போட்டி-2017

31696 0

யேர்மன் தமிழ்க்கல்விக் கழகத்தின் வழிகாட்டலோடு செயற்பட்டுவரும் தமிழாலயங்களில் ஒன்றான பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்ப் போட்டி 20.08.17 அன்று சிறப்பாக நடைபெற்றது. மங்கலவிளக்கேற்றல் யேர்மன் தேசியக்கொடி மற்றும் தமிழாலயக்கொடி ஏற்றல் அகவணக்கம் தமிழாலயப்பண் இசைத்தல் அணிநடை என்பவற்றைத் தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக உற்சாகத்தோடு இடம்பெற்றன.

பாட்சுவல்பாக் தமிழாலயம் நடாத்திய மெய்வல்லுனர்போட்டியிலே அயலிலேயுள்ள பிராங்பேர்ட் டாம்ஸ்ரட்-றோஸ்டொவ், மேர்பெல்டன்-வால்டொவ் மற்றும் பென்ஸ்கைம் தமிழாலயங்களின் மாணவர்கள் பெற்றோர்கள் பார்வையாளர்களெனப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்குபற்றிச் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment