பார்சிலோனா தாக்குதல் – மொராக்கோ நாட்டில் இருவர் கைது 

184 0

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் 13 பேரை பலிகொண்ட தாக்குதலில் தொடர்புடையதாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் தாக்குதால் மேற்கொள்ளப்பட்டது.

அந்த கோர தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியாகினர். மேலும் 30க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்ற நிலையில்இ இதில் தொடர்புடைய தீவிரவாதிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மொராக்கோ நாட்டில் இருவர் பார்சிலோனா தாக்குதலை கொண்டாடி பதிவிட்டதாக அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment