ஓ.பி.எஸ், எடப்பாடி இணைவு: அமைச்சரவையில் மாற்றம்

210 0

நீண்ட காலம் கேள்விக்குறியாகி இருந்து வந்த அதிமுகவின் இரண்டு அணிகளின் இணைப்பு சாத்தியமாகி உள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர், கடந்த சுமார் 7 மாதங்களாக பிரிந்திருந்த அதிமுக என்கிற தனிப்பெருங்கட்சி தற்போது ஒன்றாக இணைந்துள்ளது.

ஓ.பி.எஸ் அணியினர் முன்வைத்திருந்த முக்கிய நிபந்தனைகளை முதலமைச்சர் எடப்பாடி அணியினர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்  இரண்டு அணிகளும் இணைந்துள்ளது.

மேலும் தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலாவை நீக்கிய பிறகு கட்சியை வழி நடத்தும் 15 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவிற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் எடப்பாடியே முதலமைச்சராக பதவியில் தொடரும் நிலையில்,துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதியேற்பார் எனவும் அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் ஏற்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment