தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வது தொடர்பில் கலந்துரையாடல்-துமிந்த

1630 20
துமிந்தமத்திய செயற்குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வது தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளும் கலந்துரையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
கன்னொருவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர்  திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கை நிறைவடைகின்றது.
இது தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளும் தமது மத்திய செயற்குழுக்களில் கலந்துரையாடியதன் பின்னர் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

Leave a comment