யுத்தப் பாதிப்புக்கு உள்ளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த இதற்கான யோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இவை பொருத்துவீடுகளாக அல்லாமல், கல் வீடுகளாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.