தரகராக செயற்பட்ட புலனாய்வுப் பிரிவின் அதிகாரி கைது

267 0

சட்டவிரோதமாக 2 கிலோவிற்கும் அதிகமான தங்க ஆபரணங்களை கடத்திவந்த அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் புலனாய்வுப் பிரிவில் செயற்படும் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

இந்த் தங்க ஆபரணங்களை சிங்கபூரில் இருந்து கடத்திவந்த ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவற்றை சுங்கத்திணைக்களத்திடம் கையளிக்காமல் விமான நிலையத்துக்கு வெளியில் எடுத்துச் சென்ற நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்த ஆபரணங்களின் பெறுமதி 91 லட்சத்து 46 ஆயிரத்து 385 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment