மத்தள விமான நிலையத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குது குறித்து பேச்சு வார்த்தை

4856 0

மத்தள விமான நிலையத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் வகையிலான பேச்சுவாரத்தைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்திய நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இடையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

மத்தள விமானநிலையத்தை குத்தகைக்கு விடப்படும்போது அதில் 49.5 சதவீத பங்கு உரிமையை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கான யோசனை இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், அதற்கு அதிகமான பங்கு உரிமத்தை இந்திய நிறுவனம் கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இதனை சீர் செய்யும் வகையில் பேச்சுவார்;த்தைகள் ஆரப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்தள விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் செயலானது, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியதை விட மோசமானதாக இருக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்

Leave a comment