மூன்று பல்கலைக்கழகங்களுக்கு புதிய வைத்திய பீடங்கள்-ராஜித சேனாரத்ன

648 0

வயம்ப, சப்ரகமுவ, மொரட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்ததான வைத்திய பீடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் த சில்வா, சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கூடிய விரைவில் வயம்ப வைத்திய பீடத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு வடமேல் மாகாண சபைக்குற்பட்ட குளியாப்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையையும் அரசின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment