சி.வி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார் – சி. தவராசா

299 0

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவரே மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரினால் கூறப்பட்ட பதில்கள் தம்மால் முன்வைக்கப்பட்ட மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் தொடர்பான கேள்விகளை  திசை திருப்பும் வகையில் அமைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தம்மால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கான ஆக்க பூர்வமான பதில்களாக அவை அமைந்திருக்கவில்லை என்றும் தவராசா குற்றம் சுமத்தினார்.

Leave a comment