வட மாகாண சபைக்கு 65 ஆயிரத்து 450 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – சி.வி

255 0

வட மாகாண சபைக்கு கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை 65 ஆயிரத்து 450 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் வட மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம் குறித்து உறுப்பினர் சிவாஜிலிங்கம் எழுப்பியிருந்த கேள்விக்கு இன்று அவையில் வழங்கிய பதிலில் முதலமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒதுக்கப்பட்ட நிதியில் 64 ஆயிரத்து 131 மில்லிய்ன் ரூபா கிடைக்கப்பெற்றதாகவும், அவற்றில் 63 ஆயிரத்து 612 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

 

Leave a comment