தேசிய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் – ஜனாதிபதி

269 0

தேசிய நல்லிணக்கத்திற்காக முன்னின்று செயற்படுபவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இதற்கு சிலர் மாறுப்பட்ட பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் மீண்டும் ஏற்படக்கூடாது.

அதற்காகவே அரசாங்கம் என்ற வகையில் செயற்பாடுகள் முன்னைடுக்கப்பட்டு வருவதாகவும், அதனை குழப்பும் வகையில் செயற்படுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment