அரிசி மூட்டை லஞ்சம் – காவல்துறை அலுவலர் கைது

898 0

அரிசி மூட்டை ஒன்றை கையூட்டலாக பெற்ற காவற்துறை அலுவலர் ஒருவர் கையூட்டல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஹெட்டிபொல நகரில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுப்பட்ட ஒருவருக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளாது அவரிடம் இருந்து அரிசி முடை ஒன்றை கையூட்டலாக பெற்றுள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

Leave a comment