நாளை காணும் ரணில் – புகைப்படக் கண்காட்சி இன்று ஆரம்பம்

237 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 04 தசாப்த கால அரசியல் பயணத்தின் சிறந்த சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டும் “நாளை காணும் ரணில்” புகைப்படக் கண்காட்சி இன்று ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் இந்தக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

1977ம் ஆண்டு இளவயது உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவான ரணில் விக்ரமசிங்க, இந்த நாட்டின் அரசியல் துறையில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது 04 தசாப்த கால அரசியல் பயணத்தில் அவரினால் மேற்கொள்ளப்பட்ட தேசிய செயற்பாடுகளை கௌரவப்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.

இந்தப் புகைப்படக் கண்காட்சி வரும் 18ம் திகதி முதல் 20ம் திகதி வரை காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்கும்.

Leave a comment