வீதியின் மத்திய ஒழுங்கையில் விரைவு பஸ் சேவை

238 0

வீதிகளின் மத்திய ஒழுங்கையில் பயணிக்கும் விரைவு பஸ் சேவை ஒன்றை உருவாக்குவதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க கூறினார். 

பஸ் முன்னுரிமை ஒழுங்கை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற ஊடகங்களை தௌிவுபடுத்தும் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

முறையான விரைவு பஸ் சேவை குறித்த யோசனை ஒன்று அரசாங்கத்திற்கு முன் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக வீதியின் மத்திய ஒழுங்கை பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக வீதிகளின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவது போன்றே பாரிய நிதியும் செலவாகும் என்பதால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a comment