கமலஹாசன் கூறும் ஊழல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும் – தங்க தமிழ்செல்வன் 

227 0

கமலஹாசன் கூறும் ஊழல் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும் என சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு அனைத்து துறைகளிலும் ஊழலில் சிக்கித் தவிப்பதாகவும் எனவே இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கமலஹாசன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், டி.டி.வி. தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்செல்வன் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

கமலஹாசன் பொதுவாக ஊழல் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர் உண்மையிலேயே ஊழல் நடந்திருக்கிறது என்று கூறும் ஆதாரத்தை வெளியிட வேண்டும்.

அவ்வாறு வெளியிட்டால் அது குறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தப்படும். அரசியல் பரபரப்புக்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என தங்க தமிழ்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment