கமல்ஹாசன் ஒரு கோழை – அரக்கோணம் சு.ரவி 

246 0

கமல்ஹாசன் ஒரு கோழை என சட்டமன்ற உறுப்பினர் அரக்கோணம் சு.ரவி குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க. அரசையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சிப்பதற்கு கமல்ஹாசனுக்கு அருகதை இல்லை.

தமிழர்கள் நலன் கருதி அவர் பேசட்டும்.

அ.தி.மு.க அரசு மீது எந்த காரணத்தை கொண்டும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு கமல்ஹாசன் தகுதியற்றவராக உள்ளார்.

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு மற்றும் மான நஷ்ட வழக்கு தொடர எடப்பாடியாரை வலியுறுத்த உள்ளோம்.
கமல்ஹாசன் சொந்தமாக தனி கட்சி தொடங்கி அரசியலுக்கு வரட்டும் அல்லது வேறு ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்துக் கொண்டு விமர்சிக்கட்டும்.

ஆனால், எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் மற்றவர்களின் முதுகிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு பேசுவது கோழைதனமாகும். இது ஆண்மைக்கு அழகல்ல எனவும் அரக்கோணம் சு.ரவி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment