பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

297 0

மட்டக்களப்பு முறாவோடை பிரதேச மக்களால், பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது அவரது உருவப் பொம்மையும் எரிக்கப்பட்டது.
மட்டக்களப்பு முறாவேடை பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெற்று வருவதாக மக்கள் போராட்டம் நடாத்திவரும் நிலையில், அதற்கு எதிரான கருத்துகளை பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இன்று மாலை மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய மக்கள், பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிரான கோசங்களை ஏழுப்பியதுடன் அவரது உருவப் பொம்மையினையும் எரித்தனர்.
முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் நிகழ்வொன்றில் முன்னர் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், குறித்த பாடசாலை காணி வேறு ஒரு இனத்தவரினால் அபகரிக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று அக்கருத்துக்கு மாறுபட்ட கருத்தினை அவர் தெரிவிப்பதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Leave a comment