பொலிஸ்மா அதிபருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும்-ருவன் குணசேகர

238 0

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேலும், இதுபற்றி கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர; பொலிஸ்மா அதிபர் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் 17 பேர் கொண்ட பொலிஸ் சட்டத்தரணிகள் சங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி கலந்தாலோசித்து வருவதாகவும் அத்தோடு இது பற்றி சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து சிவில் நீதிமன்றில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் போலியானது என்றும் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment