வவுனியாவில், பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று முற்றுகையிட்டனர்(காணொளி)

2106 0

வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கி வந்த, பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை, சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று முற்றுகையிட்டனர்.

இதன் போது வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் சென்ற குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியசாலை சில காலமாக வவுனியாவில் இயங்கி வந்த நிலையில், சுகாதார பரிசோதகர்களால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன் மருந்துப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச் சுற்றிவளைப்பு குறித்து கருத்து தெரிவித்த வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன், குறித்த வைத்தியசாலையானது எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை எனவும், மருந்து வகைகள் எவ்வாறானவை என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Leave a comment