2020 வரையில் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையுடன் இருக்கும்

228 0

நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் நடைபெறும்வரை இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கும் நீடிக்கும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது

கிராமிய பொருளாதார அமைச்சர் பி ஹரிசன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்

அரசாங்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக தற்போது பல்வேறு மட்டங்களிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் கூட அரசாங்கத்தை அகற்றுவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் 2020 வரை அரசாங்கத்தை மாற்றமுடியாது.

வரலாற்றில் முதல்தடவையாக இரண்டு பிரதானக்கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் அதற்குள் முரண்பாடுகள் வருவது இயல்பானதே என்றும் அமைச்சர் ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்

எதுவாயினும் அரசாங்கம், நாட்டை அபிவிருத்திக்கு அழைத்துச்செல்லும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment