ஆவா குழு சந்தேக நபர்களுக்கு வௌவேறு சிறைகள்?

3087 0

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை வௌ;வேறு சிறைகளில் தடுத்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 17க்கும் அதிகமானவர்கள் தற்போது யாழ்ப்பாணச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவின் தலைவரான ஆவா என அழைக்கப்படும் குமகேசன் வினோதன் என்பவரும் தற்போது அவர்களுடனேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் சிறையில் ஒன்றாக இருக்கும் போது ஏதேனும் சூழ்ச்சிகளில் ஈடுபடக்கூடும் என்று சந்தேகத்தின் பேரில் அவர்களை நாட்டின் வௌ;வேறு சிறைகளில் தடுத்து வைப்பதற்கு காவற்துறையினர் உத்தேசித்திருப்பதாகவும், இதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை கோரி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த காரணத்துக்காக தற்போது யாழ்ப்பாண சிறைக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment